உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி பங்குனி உத்திரவிழா துவக்கம்: ஏப்., 13ல் தேரோட்டம்

பழநி பங்குனி உத்திரவிழா துவக்கம்: ஏப்., 13ல் தேரோட்டம்

பழநி : பழநி திருஆவினன்குடி கோயில் பங்குனி உத்திரவிழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.கொடுமூடி தீர்த்தக்காவடிக்கு புகழ்பெற்ற, பழநி பங்குனி உத்திரவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை, பெரியநாயகியம்மன் கோயிலில் இருந்து திருஆவினன்குடி கோயிலுக்கு, முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார்.நேற்று கொடியேற்றத்தை முன்னிட்டு, விநாயகர் பூஜை, அஸ்த்ர தேவர் காப்புக்கட்டு, கிராமசாந்தி, கலசங்கள் வைத்து மயூரயாகம் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. வேல், மயில், சேவல் வரையப்பட்ட கொடிப்படம், திருஆவினன்குடிகோயில் வெளிப்பிரகாரம் சுற்றி வந்து, பாத விநாயகர் கோயில் வரை சென்று வந்தது. வேதபாராயணங்கள் முழங்க, காலை 9.40 மணிக்கு, அரோகரா கோஷத்துடன் கொடியேற்றம் நடந்தது. பின், முத்துகுமாரசுவாமி, வள்ளி தெய்வானையுடன், கிரிவீதியில் உலாவந்தார். காலசந்தி பூஜையில் பெரியநாயகியம்மன் கோயிலிலும், உச்சிகாலத்தில் மலைகோயிலிலும் காப்புக்கட்டுதல் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக, ஏப்.,12ல் திருக்கல்யாணம்; ஏப்.,13 மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !