உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமத்தி வேலூர் பால தண்டாயுதபாணி கோயிலில் பங்குனி உத்திர விழா

பரமத்தி வேலூர் பால தண்டாயுதபாணி கோயிலில் பங்குனி உத்திர விழா

பரமத்தி வேலூர் ;   வேலூர் வட்டம், பாலப்பட்டி கதிர்மலை பால தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் கடந்த திங்களன்று  நடைபெற்றது.  வரும் 12-ம் தேதி வரை தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடைபெறும்.    13-ம் தேதி காலை 10 மணிக்கு தீர்த்தக் குட ஊர்வலம் நடைபெறும். பின்னர்  தீர்த்த அபிஷேகமும், 2 மணிக்கு மகேஸ்வர பூஜையும், இரவு 7 மணிக்கு சுவாமி புறப்பாடும் நடைபெறும்.  14-ம் தேதி காலை பொங்கல் மாவிளக்கு பூஜையும், மாலை சுவாமி வீதி உலாவும் , 15-ம்  தேதி மாலை அன்னை சீதை காளியம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகளும்   நடக்கிறது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !