உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐயனாரப்பனுக்கு கிடா வெட்டி பூஜை!

ஐயனாரப்பனுக்கு கிடா வெட்டி பூஜை!

கடலூர்: கடலூர் மஞ்சக்குப்பம் தென் பெண்ணையாற்றங்கரையில் உள்ள நீர்ஓடை ஐயனாரப்பனுக்கு கிடா வெட்டி பூஜை நடந்தது.கடலூர் மஞ்சக்குப்பம் தென்பெண்ணை நதிக் கரையில் உள்ள நீர் ஓடை ஐயனாரப்பனுக்கு ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டில் கிடா வெட்டி பூஜை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு @நற்று முன்தினம் (13ம் தேதி) காலை 9:00 மணிக்கு அங்காளம்மன் கோவிலில் இருந்து எல்லை கட்டி ஊர்வலம் நடந்தது. @நற்று 14ம் தேதி காலை சுவாமிக்கு அபிஷேக ஆராதனையும், சந்தனக்காப்பும் நடந்தது. பின்னர் கிடா வெட்டி சிறப்பு பூஜை நடந்தது. மதியம் பிரியாணி தயார் செய்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !