பார்த்தசாரதி கோவிலில் வெண்ணெய் தாழிக் கண்ணன் கோலத்தில் சுவாமி!
ADDED :4224 days ago
திருவல்லிக்கேணி: பார்த்தசாரதி கோவிலில், சித்திரைப் பெருவிழாவின் எட்டாம் நாள, வெண்ணெய் தாழிக் கண்ணன் கோலத்தில், சுவாமி வீதியுலா நடந்தது. 22ம் தேதி இரவு, குதிரை வாகனத்தில் வீதியுலா நடந்தது. 23ம் தேதி காலை, 6.00 மணிக்கு, ஆளும் பல்லக்கில் வீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து தீர்த்தவாரி நடக்கிறது. இரவு 8.00மணிக்கு, கண்ணாடிப் பல்லக்கில் வீதியுலா நடக்க உள்ளது.