ஆத்தூர் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா
ADDED :4171 days ago
சேலம்: சேலம் மாவட்டம், ஆத்தூர் விநாயகபுரத்தில் உள்ள ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் கோயில் 29-ஆவது ஆண்டு சித்திரைத் திருவிழாவில் நேற்று முக்கியநிகழ்ச்சியான அலகு குத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தி ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும், சுவாமி வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.