கதிர்நரசிங்கப்பெருமாள் கோயிலில் அஷ்டமி பூஜை!
ADDED :4203 days ago
ரெட்டியார்சத்திரம் : அஷ்டமியை முன்னிட்டு கொத்தபுள்ளி கதிர்நரசிங்கப்பெருமாள் கோயிலில், சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக, கமலவள்ளி சமேத பெருமாளுக்கு, பால் அபிஷேகம் நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, ஏகாந்தசேவையில் ஆராதனை நடந்தது. பின்னர், பைரவருக்கு சந்தனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. விசேஷ அலங்காரத்துடன் நடந்தது. அஷ்டமிபூஜையில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
* கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயிலில், அஷ்டமி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.