உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாத்தாம்பாடி கிராமத்தில் சாகை வார்த்தல் விழா!

சாத்தாம்பாடி கிராமத்தில் சாகை வார்த்தல் விழா!

அவலூர்பேட்டை: சின்ன சாத்தாம்பாடியில் சாகை வார்த்தல் விழா நடந்தது. மேல்மலையனூர் ஒன்றியம் சாத்தாம்பாடி ஊராட்சிக்குட்பட்ட சின்ன சாத்தாம்பாடி கிராமத்தில் மாரியம்மன் கோவிலில், சாகை வார்த்தல் விழா நடந்தது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரதனை நடந்தது. பிற்பகலில் கோவில் வளாகத்தில் சாகை வார்த்தல் நடந்தது. பக்தர்கள் பூங்கரகம் எடுத்து ஊர்வலம் வந்தனர். இதில் திரளான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !