உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலம் வைகாசித் திருவிழா!

மயிலம் வைகாசித் திருவிழா!

மயிலம்: மயிலம் கன்னியம்மன் கோவில் வைகாசி திருவிழாவில் சாகை வார்த்தல் நடந்தது. மயிலம் கன்னியம்மன் சுவாமிக்கு வைகாசி திருவிழாவை முன்னிட்டு, மலையடிவாரம் மயிலாடும் பாறை அருகில் பூங்கரகம், கன்னியம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்து முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். கிராம மக்கள் இசையுடன் நாட்டுப்புறப் பாடல்களை பாடி சென்றனர். மயிலம் ஜெ.ஜெ. நகரில் உள்ள அம்மன் கோவிலில் பகல் 12 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. பிற்பகல் ஒரு மணிக்கு சாகை வார்த்தல் நடந்தது. மாலை 6 மணிக்கு அம்மன் வீதியுலா காட்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !