ஆஞ்சநேயர் கோவில் உண்டியல் திறப்பு ரூ. 25 லட்சம்!
நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், நேற்று உண்டியல் திறக்கப்பட்டதில், ஏழு கிராம் தங்கம், 159 கிராம் வெள்ளி, 25 லட்சத்து, 29 ஆயிரத்து 635 ரூபாய் காணிக்கையாக போடப்பட்டிருந்தது. அவை அனைத்தும், அரசு கணக்கில் செலுத்தப்பட்டது.நாமக்கல் ஆஞ்சநேயர் ஸ்வாமி கோவிலுக்கு, தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்கள், வந்து செல்கின்றனர். ஸ்வாமிக்கு, விசேஷ தினம் மட்டுன்றி மற்ற தினங்களுக்கும், சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அர்ச்சனை, அலங்காரம், தங்கத்தேர், கவசங்கள் சாத்துதல் ஆகியவவை நடக்கிறது. பக்தர்களிடம் இருந்து பல பொருட்கள் காணிக்கையாக பெற்றாலும், அங்குள்ள உண்டியல் மூலமாக, ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கில் பக்தர்கள் காணிக்கை செலுத்துகின்றனர். அந்த வகையில், நேற்று, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் தலைமையில், உண்டியல் திறக்கப்பட்டது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் மகளிர் குழுவினர், உண்டியலில் உள்ள தங்க நகை, வெள்ளி பொருட்கள், பணம் ஆகியவற்றை தனித்தனியாக பிரித்தனர். அதில், ஏழு கிராம் தங்கம், 159 கிராம் வெள்ளி, 25 லட்சத்து, 29 ஆயிரத்து 635 ரூபாய் இருந்தது. பக்தர்களின் உண்டியல் பணம், அரசு கணக்கில் செலுத்தப்பட்டது.