உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மச்சாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழா!

அம்மச்சாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழா!

முருக்கேரி: திண்டிவனம் அடுத்த மானுõர் கிராமம் அம்மச்சாரம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.  இதையொட்டிகடந்த 6ம் தேதி மாலை 6  மணிக்கு விக்னேசுவர பூஜை, கணபதி ஹோமம், புற்றுமண் எடுத்து வருதல், வாஸ்து சாந்தி, பஞ்சபாலிகை பூஜை, காப்பு கட்டுதல், கும்ப  அலங்காரத்துடன் முதற் கால யாக பூஜைகள் நடந்தது. 7ம் தேதி காலை 7 மணிக்கு இரண்டாம் கால பூஜைகளாக கோ பூஜை, அஷ்ட திரவிய ஹோமம்,  விசேஷ மூலிகை ஹோமங்கள், மகா பூர்ணாஹூதி நடந்தது. காலை 9.50 மணிக்கு  முருக்கேரி ஸ்ரீலஸ்ரீ சீனுவாசசாமி, யோக விநாயகர் ஆலய  அர்ச்சகர் நாகராஜ் அய்யர் குழுவினர் கும்பாபிஷேகம் செய்தனர். 10 மணிக்கு மூலவர்  அம்மச்சாரம்மனுக்கு பிரதிஷ்டை செய்தனர்.  இரவு அம்மன்  பூ அலங்காரத்தில் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !