விநாயகர் கோவிலில் மழை வேண்டி பாலபிஷேகம்!
ADDED :4157 days ago
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் அரசமரத்தடி விநாயகர் கோவிலில் மழை வேண்டி, சிறப்பு பாலபிஷேக பூஜைகள் நடந்தது. பால்குடத்துடன் பெண்கள் ஊர்வலம் வந்தனர். ஊராட்சித் தலைவர் கண்ணாயிரம், துணைத் தலைவர் பாபு, பாலகிருஷ்ணன், ஊராட்சி செயலர் ஆனந்து மற்றும் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மகளிர் குழுவைச் சேர்ந்த தங்கம் காசி, ராதா மாரிமுத்து, மாரி பொன்னம்பலம், முத்தம்மாள் சரவணன் செய்தனர்.