உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி சத்தியமங்கலத்தில் ஊஞ்சல் உற்சவம்!

செஞ்சி சத்தியமங்கலத்தில் ஊஞ்சல் உற்சவம்!

செஞ்சி: சத்தியமங்கலம் முத்து மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. செஞ்சி தாலுகா சத்தியமங்கலம் முத்து மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளி உற்சவம் நடந்தது. விழாவை முன்னிட்டு காலை 9 மணிக்கு விநாயகர் கோவிலில் இருந்து பால்குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்து மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். மாலை ஊரணி பொங்கல் வைத்தனர். இரவு 7.30 மணிக்கு ஊஞ்சல் தாலாட்டு நடந்தது. மீனாட்சியம்மன் அலங்காரத்தில் மாரியம்மன் அருள்பாலித்தார். பூஜைகளை குமார் அய்யர் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !