உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெற்றி மேல் வெற்றி!

வெற்றி மேல் வெற்றி!

ஒரு செயலைத் தொடங்குகிறோம். என்ன தான் திட்டமிட்டு துவங்கினாலும் இடையில் சில தடைகள் வருகின்றன. மீண்டும் முயற்சிக்க வேண்டியிருக்கிறது. இதுபோல, தடைகள் வராமல், ஆரம்பித்த செயல் தடங்கலின்றி வெற்றிகரமாக முடிய எளிய பரிகாரம் இருக்கிறது. அதுதான் மகாகணபதி சகஸ்ரநாம ஸ்தோத்திரம் சொல்வது. அதாவது, விநாயகரை அவரது ஆயிரம் பெயர்கள் சொல்லி வணங்குவது. ஒரு செயலைத் துவங்குவதற்கு 48 நாட்கள் முன்னதாக, இந்த பாராயணத்தை சொல்ல ஆரம்பிக்கலாம். தினமும் அதிகாலை வேளையில் விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து, இந்த ஸ்தோத்திரத்தைச் சொன்னால் பலன் இரட்டிப்பாக இருக்கும். இந்த பாராயணம் செய்ய வயது வரம்பு கிடையாது. ஆண், பெண், குழந்தைகள் யார் வேண்டுமானாலும் சொல்லலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !