ஆவணி அமாவாசை: ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்!
ADDED :4112 days ago
ராமேஸ்வரம்: ஆவணி அமாவாசையை முன்னிட்டு, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு, தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். இவர்களில் பலர், தங்களது முன்னோர்களுக்காக, அக்னி தீர்த்த கடற்கரையில் திதி பூஜை செய்து, கடலில் புனித நீராடினர். இதேபோல், கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடி விட்டு, சுவாமி, பர்வத வர்த்தினி அம்பாள் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜைகளில் பங்கேற்றனர்.