உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடம்பூரில் கும்பாபிஷேகம்

கடம்பூரில் கும்பாபிஷேகம்

கடம்பூர் விநாயகர், மாரியம்மன், ஓம்சக்தி, பாலசுப்ரமணியர் ஆலயங்களின் கும்பாபிஷேகம் நடந்தது. ரிஷிவந்தியம் அடுத்த கடம்பூர் கிராமத்தில் உள்ள விநாயர், மாரியம்மன், ஓம்சக்தி, பாலசுப்ரமணியர் ஆகிய ஆலயங்களில் கும்பாபிஷேக விழா கடந்த 7ம்தேதி காலை துவங்கியது. காலை 9 மணியளவில் முதல் கால பூஜை, மாலை 5 மணியளவில் இரண்டாம் கால பூஜை, நேற்று காலை 6 மணியளவில் மூன்றாம் காலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து 10.30 மணியளவில் விநாயகர், மாரியம்மன், பாலசுப்ரமணியர், ஓம்சக்தி ஆலயங்களின் கும்பாபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை ஊராட்சி தலைவர் வைத்தியநாதன், துணைதலைவர், செயலர் உட்படபலர் செய்திருந்தனர். இரவு யானை மீது சுவாமி ஊர்வலம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !