ஆதி கேசவ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு!
ADDED :4011 days ago
அவலூர்பேட்டை: அவலூர்பேட்டை ஆதி கேசவ பெருமாள் கோவிலில் 5ம் சனிக்கிழமை சிறப்பு படையல் வழிபாடு நடந்தது. அவலூர்÷ பட்டையில் ஐந்தாம் சனிக்கிழமையை முன்னிட்டு ஆதி கேசவ பெருமாள் கோவிலில் தளு, படையல் சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு ஆதிகேசவ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதில் ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.