திருப்பரங்குன்றத்தில் சஷ்டி யாகசாலை பூஜைகள்!
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டியை முன்னிட்டு அக்., 29 வரை தினமும் காலை 8.30 மணிக்கும், மாலை 5 மணிக்கும் விசாக கொறடு மண்டபத்தில் யாகசாலை பூஜைகள் நடக்கின்றன. சஷ்டியை முன்னிட்டு அக்., 24 முதல் யாகசாலையில் சுப்பிரமணிய சுவாமிக்கு தங்ககுடம், வள்ளி, தெய்வானைக்கு வெள்ளி குடம், பரிவார மூர்த்திகளுக்கு வெள்ளி சொம்புகளில் புனிதநீர் நிரப்பி, விக்னேஷ்வர பூஜை, கும்ப பூஜை முடிந்து தீபாராதனைகள் நடக்கின்றன. அக்., 30 காலையில் சண்முகருக்கு தங்கக்குடத்தில் புனித நீரால் அபிஷேகம் செய்யப்படும். முக்கிய நிகழ்ச்சியாக அக்.,28ல் வேல் வாங்கும் நிகழ்ச்சியும், அக்., 29 மாலை 4.30 மணிக்கு சன்னதி தெருவில் சொக்கநாதர் கோயில் முன் சூரசம்ஹார லீலையும், அக்., 30 காலையில் சட்டத் தேரில் தங்கமயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை கிரிவீதிகளில் வலம் வருகின்றனர்.கோயிலில் தங்கி விரதமிருக்கும் பக்தர்கள், மாவிளக்கு வைத்து சஷ்டி விரதத்தை முடிப்பர்.