பொள்ளாச்சியில் இன்று சூரசம்ஹார திருவிழா!
பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹார திருவிழா கடந்த 24ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினசரி நான்கு கால அபிேஷக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, நேற்று மாலை 6:00 மணிக்கு வேல் வாங்கும் உற்சவமும், இன்று(29ம் தேதி) மாலை 3:00 மணிக்கு பேரூர் ஆதினம் இளைய பட்டம் மருதாசல அடிகளார் முன்னிலையில், சூரசம்ஹார நிகழ்ச்சியும் நடக்கின்றன. சுப்ரமணிய சுவாமி கோவிலில் இருந்து, ஊர்வலமாக புறப்பட்டு கிழக்கு எஸ்.எஸ்., கோவில் வீதி வழியாக சென்று சத்திரம் வீதி, தெப்பக்குளம் வீதி சந்திப்பு பகுதியில், தாரகன் வதையும், தெப்பக்குளம் வீதி-வெங்கட்ரமணன் வீதி சந்திப்பில் இரண்டாவது சூரன் சிங்கமுகன் வதையும், வெங்கட்ரமணன் வீதி, ராஜாமில் ரோடு சந்திப்பில் மூன்றாவது சூரன் பானுகோபன் வதை நிகழ்ச்சியும் நடக்கிறது. பின், உடுமலை ரோடு வழியாக சென்று தேர்நிலையம் பகுதியில், சூரபத்மனை வதை செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.தொடர்ந்து, 30ம் தேதி காலை 10:00 மணிக்கு மகா அபிேஷகம், மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், 31ம் தேதி மாலை 6:00 மணிக்கு திருஊஞ்சல் உற்சவ பூர்த்தி நிகழ்ச்சி நடக்கிறது.