கோபுரதரிசனம் கோடி புண்ணியம் என்பது ஏன்?
ADDED :4127 days ago
கோபுரம் பாத யுகளம் என்கிறது ஆகம சாஸ்திரம். அதாவது கோபுரம் இறைவனுடைய திருவடியாகும் என்பது பொருள். அவரின் திருவடியைத் தரிசிப்பது அரிது தானே! நமக்காக கருணை கூர்ந்து எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் படியாக திருவடிகளாகிய கோபுர தரிசனத்தை இறைவன் அருள்கிறார். இதைத் தரிசிப்பவர்க்கு கோடி புண்ணியம் கிடைக்கத் தானே செய்யும்.