உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஓசியில் 50 பவுன் சங்கிலி!

ஓசியில் 50 பவுன் சங்கிலி!

தலைப்பைப் படித்ததும், இந்த விலையில்லா சங்கிலியை வாங்கியே தீர வேண்டும் என ஆர்வம் தொற்றியிருக்குமே!பரசுராம கல்ப சூத்ரம் என்று ஒரு நுõல். அதில், ‘யாக மந்திரம் கத்வா க்லுப்தா (ஆ)கல்ப ஸல்கல்பா ஆகல்போவா’ என்று ஒரு ஸ்லோகம்...இதன் பொருள் தெரியுமா! ’ஆகல்ப’ என்றால், மோதிரம், சங்கிலி, கம்மல் அல்லது கடுக்கன், வளையல் உள்ளிட்ட நகைகள். ‘க்லுப்தாகல்ப’ என்றால், ‘நிறைய நகைகளை அணிதல்’ . நீங்கள் அம்மன் பக்தராக இருந்தால், நிறைய நகை போட்டுக்கொண்டு, பூஜை செய்ய வேண்டும் என்கிறார் பரசுராமர். துõய உடையும், நிறைய நகைகளையும், நியாயமான சம்பாத்தியத்தில் நமக்கு அம்பாள் தந்திருக்கிறாள் என்றால் தாராளமாக அணிந்து கொண்டு பூஜை செய்யலாம். இதைப் பார்த்து அம்பாளே மகிழ்வாளாம். தன் பிள்ளைக்கு இவ்வளவு செல்வத்தை வாரி வழங்கியிருக்கிறோமே! அவன் அல்லது அவள் மகிழ்ச்சியுடன் வாழ்கிறானே(ளே) என்று பெருமைப்படுவாளாம்.“சரி...நான் பரம ஏழை. கம்மல் கூட இல்லை. எனக்கு அம்பாளை வணங்கும் தகுதி கிடையாதா” என்று ஒரு கேள்வி எழுமே! அப்படி வருத்தப்பட தேவையே இல்லை.ஏனெனில், அதற்கும் ஒரு ஸ்லோகம் இருக்கிறது, “ஸங்கல்பா (ஆ) கல்போவா” என்று. அதாவது, மனதால் நாம் நிறைய நகைகள் அணிந்து கொண்டிருப்பதாக கற்பனை செய்து கொண்டு பூஜை செய்யலாம். சொல்லப்போனால், முன்னதை விட பின்னது தான் எளிது. நாம், நகைக்கடைகளில் ஐம்பது பவுனில் சரம் சரமாய் தொங்குகிற நகையைப் பார்த்திருப்போம். வாழ்க்கையில், ஒருநாளாவது அதை அணிய மாட்டோமா என்று கற்பனை செய்திருப்போம். அந்த கற்பனையை இப்போது ‘ஓசியாகவே’ பூர்த்தி செய்து கொள்ளலாம். அதை அணிந்திருப்பது போல் பாவனை செய்தபடியே அம்பாளை பூஜியுங்கள். லட்சுமி கடாட்சம் தானாக தேடி வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !