நெய் தேங்காய் ஏன்?
ADDED :4131 days ago
ஐயப்பன் கோயிலில் நெய்யால் ஐயப்பனுக்கு அபிஷேகம் நடக்கும். ஆனால், தனி நெய்யையோ, தனி தேங்காயையோ நிவேதனம் செய்யமாட்டார்கள். தேங்காய்க்குள் நெய் ஊற்றி நெய் தேங்காயையே நிவேதனமாக்கினார்கள். இதற்கு காரணம் உண்டு. முக்கண் கொண்ட தேங்காய் சிவனை ஞாபகப்படுத்தும். பசு நெய் கோபாலனாகிய மகா விஷ்ணுவை நினைவு படுத்தும். சிவன், விஷ்ணு இருவருடைய அருள் கதிரொளியின் கூட்டு சக்தியேசாஸ்தாவாகிய ஐயப்பன். இதனால் சிவவிஷ்ணு வடிவமான நெய் தேங்காயை அவருக்கு நிவேதனம் செய்கின்றனர்.