நீலிமலை!
ADDED :4134 days ago
இந்த மலையில் ஏறுவதும் கரிமலையில்ஏறுவது போல் மிகக்கடினம். கால் முட்டி,தரையில் உரசுமளவு சிரமப்பட்டு ஏற வேண்டும். பக்தர்கள் களைப்பை போக்க பக்தர்கள் இங்கு மிக சப்தமாக சரண கோஷமிடுவர். நீலிமலையில் ஏறகருங்கல் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. நீலிமலையில் வசித்த மாதங்க மகரிஷி, தன் மகள் நீலியுடன் சிவனை நோக்கி தவம் செய்தார். அவளது பெயரில் இந்த மலை உள்ளது. மலைப்பாதையின் வலது பக்க பாதையைசுப்பிரமணியர் பாதை என்பர். இந்த வழியாகத்தான் ஐயப்பன் கோயிலுக்கு தேவையான சாமான்கள் கழுதை மூலமாக கொண்டு செல்லப்படுகிறது.நீலிமலை ஏற்றத்தில் அப்பாச்சி மேடு, இப்பாச்சி குழி என்ற சமதளப்பகுதி வருகிறது. அப்பாச்சிமேட்டில் பச்சரிசி மாவு உருண்டையை கன்னிசுவாமிகள் வீசி எறிவார்கள். வனதேவதையை திருப்திப்படுத்த இந்த வழிபாடு நடத்தப்படுகிறது.