வேதகிரி!
ADDED :4164 days ago
பவானியிலிருந்து மேட்டூர் செல்லும் சாலையில் உள்ள ஊராட்சிக் கோட்டை மலை 4000 அடி செங்குத்தானது. இதன் உச்சியில் வேத கணபதி, வேத தண்டாயுதபாணி, வேதகிரீஸ்வரர், வேத நாயகி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் வேதவரதராஜப் பெருமாள் சன்னிதிகள் உள்ளன. திருமால், இத்தலத்தில் வியாசராகத் தோன்றி வேதங்களைத் தொகுத்ததாக தலபுராணம். இம்மலை உச்சியில் உள்ள ஊற்று நீரைப் பருகினால் தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை. இது கிரிவலம் செய்ய உகந்த மலையாகும்.