உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதனூரில் பிரதோஷ வழிபாடு!

ஆதனூரில் பிரதோஷ வழிபாடு!

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை தாலுகா ஆதனூர் ஸ்ரீஅருணாசலேஸ்வரர் சுவாமி கோவிலில் கார்த்திகை மாத பிரதோஷ வழிபாடு நடந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம் மாலை சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், விபூதி, பன்னீர், இளநீர் உள்ளிட்ட அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சுவாமி அருள் பாலித்தார். இதேபோல் எலவனாசூர்கோட்டை ஸ்ரீகிராம அர்த்தநாரீஸ்வரர் கோவில், உளுந்தூர்பேட்டை ஸ்ரீகைலாசநாதர் சுவாமி கோவில், உளுந்தாண்டார்கோவில் ஸ்ரீமாஷபுரீஸ்வரர் சுவாமி கோவில் மற்றும் திருநாவலூர் பக்த ஜனேஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !