ஸ்ரீரங்கம் ரங்கநாதர் பகல்பத்து 2ம் நாள் உற்சவம்!
ADDED :3946 days ago
ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு பகல்பத்து உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. பகல் பத்து உற்சவத்தின் முதல் நாளில் அடுக்கு பதக்க ராஜகிரிடம் என்ற நீள் முடியுடன் வைர அபயஹஸ்தம் அணிந்து வந்து நம்பெருமாள் பக்தர்களுக்கு சேவை சாதித்தார். வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் இரண்டாம் நாளான நேற்று, நம்பெருமாள், முத்து ஆண்டாள் கொண்டை, சிவப்பு கல் அபயஹஸ்தம், புலிநக மாலை மற்றும் முத்து மாலை அணிந்து, அர்ச்சுன மண்டபத்துக்கு புறப்பட்டார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.