தில்லைக் காளியம்மனுக்கு அர்த்தஜாம சிறப்பு பூஜை!
ADDED :3948 days ago
சிதம்பரம்: சிதம்பரம் தில்லைக் காளியம்மனுக்கு மார்கழி மாத அமாவாசை அர்த்தஜாம சிறப்பு பூஜை நடந்தது. இதனையொட்டி விநாயகர், பி ரம்சாமுண்டி சன்னதியில் நெய் தீபம் ஆராதனை சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து தில்லைக் காளியம்மனுக்கு குடம் நல்லெண்ணை அபிஷேகம் தைலக்காப்பு செய்யப்பட்டு, பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களுடன் மகா அபிஷேகம் நடந்தது. தில்லைக்காளிக்கு வெண்பட்டு சாற்றப்பட்டு, வெட்டிவேர், விலாமுச்சி வேர், செவ்வரளி மலர்களால் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அம்மனுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.