பாண்டுரங்க பெருமாள் கோவிலில் அனுமன் ஜெயந்தி!
ADDED :3948 days ago
புதுச்சத்திரம் அடுத்த பெரியப்பட்டு ரகுமாயி சமேத பாண்டுரங்க பெருமாள் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப் பட்டது. விழாவையொட்டி, காலை 6:00 மணிக்கு பாலாபிஷேகம் மற்றும் திருமஞ்சனம் நடந்தது. மதியம் 2:00 மணிக்கு மஞ்சள், துளசி மற்றும் திரவியபொடி, தேன், பஞ்சாமிர்தம், சந்தன அபிஷேகம் செய்து தீபாராதனை நடந்தது. அதனைத்தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு அனுமன் வெண்ணைக் காப்பில் அலங்கரிக்கப்பட்டு, வடை மாலை, துளசி மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்தனர்.