உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராவுத்தநல்லூரில் அனுமன் ஜெயந்தி!

ராவுத்தநல்லூரில் அனுமன் ஜெயந்தி!

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அடுத்த ராவுத்தநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் வெண்ணை காப்பு  அலங்காரம்  நடந்தது. மூ ங்கில்துறைப்பட்டு அடுத்த ராவுத்தநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நேற்று  முன்தினம் காலை 8:00  மணிக்கு மூலநட்சத்திர ஹோமம் நடந்தது. தொடர்ந்து  12:00 மணி முதல் 1:00 மணிக்குள் சுவாமிக்கு வடமாலை, வெற்றிலை, எலுமிச்சை,  பணம்,  துளசி, மலர்களால் மாலை அணிவித்து மஹா திருமஞ்சன நிகழ்ச்சி நடந்தது. மாலை 6:00 மணிக்கு சுவாமிக்கு வெண்ணை காப்பு நிகழ்ச்சியும் நடந் தது. இதனைத்தொடர்ந்து சுவாமிக்கு  தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர்.  கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு  காலை முதல் மாலை வரை அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !