உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றத்தில் எண்ணெய்க் காப்பு திருவிழா துவக்கம்!

திருப்பரங்குன்றத்தில் எண்ணெய்க் காப்பு திருவிழா துவக்கம்!

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், தெய்வானை அம்மனுக்கு எண்ணெய்க் காப்பு திருவிழா துவங்கியது. கோயிலில் உற்சவர் தெய்வானை மட்டும் புறப்பாடாகி, ஆஸ்தான மண்டத்தை மூன்றுமுறை வலம் சென்று திருவாச்சி மண்டபத்தில் எழுந்தருளினார். சிவாச்சார்யார்களால் அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டு மூலிகை எண்ணெய் சாத்துப்படி செய்யப்பட்டது.அம்மனின் கிரீடத்தில் கருமுடி சாத்துப்படியாகி, வெள்ளி சீப்பால் தலைவாருதல், தங்க ஊசிமூலம் பல்துலக்குதல், மைஇட்டு கண்ணாடி பார்த்த நிகழ்ச்சிகள் முடிந்து தீபாராதனை நடந்தது. ஜன. 10 வரை இந்நிகழ்ச்சிகள் நடைபெறும். திருவிழா நாட்களில் பக்தர்களுக்கு எண்ணெய் பிரசாதம் வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !