உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜை!

விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜை!

விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜை நடந்தது. மாட்டுப் பொங்கலையொட்டி, விருத்தாசலம் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி பகவானுக்கு நேற்று காலை 9:15 மணிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், மஞ்சள் உட்பட 12 பொருட்களால் சிறப்பு அபிஷேகம், கரும்பு, வாழை, எலுமிச்சை, மலர் மாலைகள் சாற்றி, மகா தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணியளவில் முருகன் சுவாமி மாடு விரட்டும் வேடுபறி உற்சவம் நடந்தது. அலங்கரித்த பல்லக்கில் முருகன் சுவாமி வீதியுலா சென்று, காந்தி நகர் நர்த்தன விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகளுடன், மாடு விரட்டும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !