வடவெட்டி அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்!
ADDED :3909 days ago
செஞ்சி: செஞ்சி தாலுகா வடவெட்டி ரங்கநாதபுரத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு தை அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு அங்காளம்மனுக்கு காலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். மாலை 7 மணிக்கு அன்னதானம் நடந்தது. இரவு 9 மணிக்கு சிறப்பு சொற்பொழிவும், வானவேடிக்கையும் நடந்தது. இரவு 11 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில் பக்தர்கள் பக்தி பாடல்களை பாடி அம்மனை வழிபட்டனர். அறங்காவலர் புண்ணியமூர்த்தி மற்றும் விழா குழுவினர், பக்தர்கள் கலந்து கொண்டனர்.