உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரதோஷ வழிபாடு!

பிரதோஷ வழிபாடு!

உடுமலை : உடுமலை சுற்றுப்பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில், நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது; சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தன.

குறிச்சிக்கோட்டை மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள சிவலிங்கேஸ்வரர் சன்னதியில், சுவாமிக்கு நேற்று மாலை, 4:30 மணிக்கு, சிறப்பு அபிேஷகத்தை தொடர்ந்து, அலங்காரம் பூஜை நடந்தது.உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் உள்ள சிவன் சன்னதி, பெதப்பம்பட்டி ரோடு, ஏரிப்பாளையத்தில் உள்ள சித்தாண்டீஸ்வரர் கோவில், எலையமுத்துார் பிரிவில் உள்ள புவனகணபதி கோவிலில் உள்ள சிவன் சன்னதி, ருத்ரப்பா நகரில் உள்ள பஞ்சமுக லிங்கேஸ்வரர் கோவில், மடத்துக்குளம், கொழுமத்தில் உள்ள தாண்டேஸ்வரர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில்களில், பிரதோஷம் முன்னிட்டு, நேற்று மாலை, 4:30 மணிக்கு, சுவாமிக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களில், அபிேஷகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !