செக்கானுாரணி வருடாபிஷேகம்!
ADDED :4086 days ago
செக்கானுாரணி: செக்கானுாரணி அருகே ஒத்தப்பட்டி மந்தையம்மன் கோயில் குபேர விநாயகருக்கு வருடாபிஷேகம் நடந்தது.இதையொட்டி சங்கல்ப, கணபதி மற்றும் கலச பூஜைகள், ஜெப பாராயணம் நடந்தன. சிவாச்சாரியார் ஸ்ரீதர் தலைமையில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. அம்மனுக்கு பூஜாரி ராஜூ அபிஷேக ஆராதனைகள் செய்தார். ஏற்பாடுகளை கிராமத்தினர்
செய்திருந்தனர்.