அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா!
ADDED :3908 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் கீழையூர் அங்காளம்மன் கோவில் மயானக்கொள்ளை விழாவில், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. திருக்கோவிலூர், கீழையூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று மயானக்கொள்ளை விழா நடந்தது. காலை 9:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அம்மன் ஏரிக்கரைமூலை இரட்டை விநாயகர் கோவிலில் இருந்து புறப்பட்டது. பக்தர்கள் பல்வேறு வேடமணிந்து கஞ்சுளி கபாளம் கையில் ஏந்தி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். மதியம் 12:00 மணிக்கு சுவாமி கோவிலை அடைந்தவுடன் மயானக்கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. இரவு முத்துப்பல்லக்கில் அம்மன் வீதியுலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பருவதராஜகுல மரபினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.