உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடமதுரை மாசித்திருவிழாவில் பூக்குழியில் இறங்கிய பக்தர்கள்!

வடமதுரை மாசித்திருவிழாவில் பூக்குழியில் இறங்கிய பக்தர்கள்!

வடமதுரை : வடமதுரை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். கடந்த பிப்., 21ல் பூத்தமலர் பூச்சொரிதலுடன் துவங்கிய திருவிழாவில் நாள்தோறும் மண்டகப்படிதாரர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அம்மன் வீதியுலா வந்தார். மார்ச் 1ல் அம்மன் சாட்டுதல், மார்ச் 3 முதல் 7 வரை அம்மன் ஊர் விளையாடல் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக நேற்றுமுன்தினம் நள்ளிரவு பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி மங்கம்மாள் கேணி மைதானத்தில் நடந்தது. இதற்காக காப்பு கட்டி விரதமிருந்த சிறுவர், சிறுமியர் உள்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண், பெண் பக்தர்கள் பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று அக்கினிச்சட்டி, மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல் போன்றவை நடந்தது. இன்று மாலை முளைப்பாரி எடுத்தல், மஞ்சள் நீராடுதலுடன் திருவிழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !