உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கலிங்க நாதேஸ்வரர் கோவில் குளத்தை சீரமைக்க பகுதிவாசிகள் கோரிக்கை

கலிங்க நாதேஸ்வரர் கோவில் குளத்தை சீரமைக்க பகுதிவாசிகள் கோரிக்கை

பேரம்பாக்கம்: பேரம்பாக்கம் அடுத்த, இருளஞ்சேரியில் உள்ள கலிங்க நாதேஸ்வரர் கோவில் குளத்தை, சீரமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பேரம்பாக்கம் அடுத்த, இருளஞ்சேரியில், 1,500 ஆண்டுகள் பழமையான சோழர் காலத்தில் கட்டப்பட்ட, அன்னை தாயினும் நல்லாள் காமாட்சி சமேத கலிங்க நாதேஸ்வரர் கோவில் உள்ளது. இதன் எதிரே, கோவிலுக்குச் சொந்தமான குளம் உள்ளது. இந்த குளத்து நீரை கொண்டு தான், சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் நடந்து வந்தது. நாளடைவில், இந்த குளத்தின் கரைகள் சேதமடைந்து, குளத்தை சுற்றி முட்செடிகள் வளர்ந்து உள்ளன. மேலும், குளத்து நீரை, தற்போது பகுதிவாசி கள் துணிகள் துவைப்பதால், கோவிலில் நடைபெறும் அபிஷேகத்திற்கு, குளத்து நீரை பயன்படுத்துவது இல்லை. கோவில் குளத்தை சீரமைப்பது குறித்து, அறநிலையத் துறைக்கு பலமுறை மனு அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை என, பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், கோவில் குளத்தை சீரமைப்பதன் மூலம், நிலத்தடி நீர் மட்டம் உயர்வதோடு, சுற்றுப்பகுதி மக்களுக்கும் பயனுள்ளதாக அமையும். எனவே, கோவில் குளத்தை சீரமைக்க, அறநிலைய துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !