உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிங்கனூர் திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா!

சிங்கனூர் திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா!

திண்டிவனம்: சிங்கனூர்  திரவுபதியம்மன்  கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. திண்டிவனம் அடுத்த சிங்கனூர் கிராமத்தில், கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு,  கடந்த 5ம் தேதி மாலை கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. மறுநாள் காலை யாகசாலை பூஜைகள் நிறைவுபெற்று,  10:15 மணிக்கு, ஜெயகணபதி,  திரவுபதியம்மன், முத்தாலம்மன்  மற்றும் பட்டாபிராமன்  கோவில்களில், யாகசாலை புனித கலச நீரால் மகா கும்பாபிஷேகம் நடந்தது. பூஜைகளை  சுரேஷ் அய்யர் தலைமையிலான குழுவினர் செய்தனர். ஸ்தபதிகள் முன்னூர் கிராமம் பெருமாள், எழில் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !