உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்மலையனூர் ஊஞ்சல் உற்சவம்: கொட்டும் மழையில் திரண்ட பக்தர்கள்!

மேல்மலையனூர் ஊஞ்சல் உற்சவம்: கொட்டும் மழையில் திரண்ட பக்தர்கள்!

செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று இரவு நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் கொட்டும் மழையிலும் லட்கணக்கான பக்தர்கள் திரண்டனர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று இரவு வைகாசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அன்று காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தங்க கவசம் அணிவித்தனர். காலை முதல் கூட்டம் அலைமோதியது இரவு 7 மணி முதல் மழை கொட்ட துவங்கியது. இரவு 11 மணிவரை மழை நீடித்தது. மழை பொழிந்த போதும் கூட்டம் குறையாமல் இருந்தது. இதனால் இரவு 12 மணிக்கு ஊஞ்சல் உற்சவத்தை துவங்கினர். ஊஞ்சல் மண்டபத்தில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளியதும், பக்தர்களும், கோவில் பூசாரிகளும் பக்தி பாடல்களையும், தாலாட்டு பாடல்களையும் பாடினர். இரவு 1 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நிறைவடைந்தது. இந்து சமாய அறநிலையத்துறை உதவி ஆணையர்  பிரகாஷ்,  அறங்காவலர் தலைவர் வடிவேல், தலைமை பூசாரி சேகர் மற்றும் அறங்காவலர்கள், மேலாளர்கள் முனியப்பன், மணி உட்பட பலர் கலந்து கொண்டனர். செஞ்சி டி.எஸ்.பி., முரளிதரன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்து கழகத்தினர் சிறப்பு பஸ்களை இயக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !