உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீபாராதனை முறை!

தீபாராதனை முறை!

வரம்உதவு பரமநின் திருமுன் ஆராதனை
வரன்மு றைசொலில் தூபமேல்
வளரொளி செய்புட்ப தீபத்தோ டராவிடப
மருவு புருடா மிருகமும்
உரியபூ சனையாற்று குடதீபம் ஐம்பிரம
வுருவஆ ரத்தி தீபம்
உடுவின்நற் சுடர்மேரு தீபிகை அதன்பின்னர்
உறும்இ ரட்சா தீபமும்
பெருகுநீர் உதவல்கண் ணாடிகுடை கவரியெழில்
பெருகால வட்டம் விசிறி
பேணும்சி ருக்குக் கருப்பூர வொளியென்று
பெரிதும்ஆ கமம்உ ரைத்தாய்
திரிநயன பரசுதர திகழுமறை யாதியே
சிற்சபை யுள்நிறை சோதியே
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !