உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இறைவனை வணங்கி வழிபடும் முறை!

இறைவனை வணங்கி வழிபடும் முறை!

சிரமட்டு மேலவணங் கிடுதல் ஏகாங்கம்அச்
சிரமிசை யோர்கை பொருந்தச்
செய்தல்து விதாகங்மாம் இருகரங் கூப்பியே
சென்னிமிசை வைத்திடு கையே
உரியமூன் றங்கம்இரு கையிணை முழந்தாள்
உறும்சி ரமொடு ஈதங்கம்ஐந்(து)
ஓங்குசிரம் இருகரம் இணைச்செவி முழந்தாள்
உயர்ந்த மார்பிவை பூமியில்
பரிசமுற வேபணிதல் அட்டாங்கம் நம்முனது
பஞ்சமுறை பணிதல் வேண்டும்
பத்தியுடன் மூன்றுவிசை குருமுன்னர் மற்றையப்
பரிசனர்க்கு ஒன்ற தேனும்
திருவுள மகிழந்துஏக சித்தமொடு வந்தனை
செயத்தக்க தெனவு ரைத்தாய்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !