விஜயீந்திர தீர்த்த மகாசுவாமிகள் ஆராதனை விழா நிறைவு!
கும்பகோணம்: கும்பகோணத்தில் விஜயீந்திர தீர்த்த மகாசுவாமிகளின், 401ம் ஆண்டு ஆராதனை விழா நிறைவு பெற்றது.
மந்த்ராலய ராகவேந்திர சுவாமிகளின் பரம குருவான விஜயீந்திர தீர்த்த மகாசுவாமிகள்,
கும்பகோணத்தில், காவிரி கரையில் பிருந்தாவனம் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து
வருகிறார். ஆயகலைகள் 64யும் கற்றுணர்ந்த இவர், 108 கிரந்தங்கள் எழுதியுள்ளார். பல்வேறு
சிறப்புகள் பெற்ற சுவாமிகளின், 401வது ஆண்டு ஆராதனை விழா கடந்த, 12ம்தேதி
தொடங்கியது. தொடர்ந்து, ராகவேந்திர சுவாமிகளின் மிருத்திகா பிருந்தாவன புனர் பிரதிஷ்டை மற்றும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மத்ய ஆராதனை விழா, 14ம் தேதி நடைபெற்றது. உத்தர ஆராதனையுடன் பட்டினபிரவேச
வீதிவுலாவுடன் விழா நிறைவடைந்தது. நிகழ்ச்சிகளில் ராகவேந்திர சுவாமிகள் மடத்தின்
பீடாதிபதி, 108வது சுபுதேந்திர தீர்த்த சுவாமிகள் கலந்து கொண்டு, மூலராமர் பூஜைகளை செய்து, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். ஆராதனை நிகழ்ச்சிகளில் கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.