அக்னி வசந்த விழா!
ADDED :3862 days ago
வேலூர்: வேலூர், வேலப்பாடி தருமராஜா திரௌபதி அம்மன் கோவிலில், மகாபாரத இசை
சொற்பொழிவு, அக்னி வசந்த விழா நேற்று நடந்தது.செங்கம் கிருஷ்ணமூர்த்தி மகாபாரத
சொற்பொழிவு ஆற்றினார். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த, பாப்பாரப்பட்டி
கோவிந்தராஜன் மகாபாரத கவி இசைப்பாடும் நிகழ்ச்சியை நடத்தினார்.
தொடர்ந்து தீ மிதி விழா, திரௌபதி அம்மன், தருமராஜா திருக்கல்யாணம், துரியோதனன்
படுகளம், தர்மர் பட்டாபிஷேகம் நடந்தது.