உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விபூதி தரிக்கும் விதிகள்!

விபூதி தரிக்கும் விதிகள்!

சுருதிபுகழ் பூதிதனை அங்குட்ட விரலினால்
தொட்டுதவ அணியின் வெந்நோய்
சூழ்ந்திடும் தர்ச்சனியி னால்ஈதல் மரணமே
சொல்லுநடு அஞ்கு லிதனால்
தருதல்புத் திரநாச மேசிறிய அஞ்குலி
தன்னி லேபெருந் தோடமாம்
சாற்றிய அநாமிகை யொடங்குட்டம் எய்திடத்
தான்தெய்வ சன்னி தியினும்
குருமுகத் தினும் உதவு வெண்ணீறு பூசிடின்
கோலமுறு மெய்யு ரோமக்
குறியெலாம் வெவ்வேறு இலிங்கவடி வாம்என்று
குறைவிலா கமம்உ ரைத்தாய்
சிரகரம் உரங்கண்ட மதில்அக்க மாலைபுனை
தில்லையந் தணர்கள் வாழும்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !