முகாசபரூர் கோவிலில்சுவாமி அருள்பாலிப்பு!
ADDED :3758 days ago
மங்கலம்பேட்டை: முகாசபரூர் வரதராஜ பெருமாள் கோவிலில்நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
மங்கலம்பேட்டை அடுத்த முகாசபரூர் வரதராஜ பெருமாள் கோவிலில், திருப்பதி தேவஸ்தானம், ஹிந்து தர்ம பரிஷத் சார்பில் நேற்று (23ம் தேதி) முதல் வரும் (29ம் தேதி) வரை ஆன்மிக நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.
இதையொட்டி நேற்று (23ம் தேதி) காலை 9:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், காலை 10:00 மணிக்கு தீபாராதனை, காலை 11:00 மணிக்குகோபூஜை, பகல் 12:00 மணிக்கு சிறப்பு யாகம் நடந்தது. மதியம் 2:00 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் வரதராஜ பெருமாள் அருள்பாலித்தார். ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.