உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செப மாலையின் பயன்!

செப மாலையின் பயன்!

முத்திதரும் ஐயைந்து மணியக்க மாலைகொடு
முறையிற்செ பங்கள் புரியின்
மொழியிருப தாறது சிவார்த்தமத னிற்பாதி
மூசுசத் துருவி னாசம்
ஒத்தஇரு பானேழு செல்வம்இரு பதினெட்டது
ஓங்குமெய்த் திடமூன் றுபத்து
உயர்புண்ணி யங்கள்மிகும் ஆபிசா ரந்தனக்கு
உற்றப தினைந் தாகுமால்
அத்தகைய மணிதனைக் காணவே பாவமறும்
அதிகசித் திகளு றுமுடற்(கு)
அதுபரிச முறினளவில் புண்ணியம் பூணவென்று
அளவிலா கமம் உ ரைத்தாய்
சித்தமகிழ் நடனம் புரிந்துயிர்க் களவிலாச்
செல்வமொடு முத்தி யருளும்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !