கருப்பண்ணசாமி அருள் அந்தாதி!
1. தேரசைந்து வருவதுபோல் தெய்வம் கறுப்பணசாமிதோளுயர்த்தி இத்திசையில் தீரனே வாருமையாதேவரெல்லாம் போற்றும் திருக்கருணை கொண்டவனேநாவசைத்துக் கூப்பிட்டேன் நலமதையே செய்திடையாபூரணத்தை உன்மூலம் புரிந்து கவிபாடுகின்றேன்காரணத்தை சாமிகிரி சித்தருக்குச் சொல்லிடையாபேரானந்த போதையோ புண்ணியனே வாருமையாபோராடும் மனத்துயரம் வாராமல் போக்கிடையா!2. போக்கிடையா போற்றுவோர் பெரும் பாவத்தை - உனைபூஜிக்க இடம் மனத்தில் கொடுத்திடையா.நோக்கிடையா நூதனமாய் செயல் புரியநேர்மைதனை நெஞ்சத்தில் நிறைத்திடையாஆக்கிடையா ஆனந்த பெருவழியை.அவதாரக் கிருஷ்ணனைப்போல் வந்திடையாகாக்கின்ற கடவுளாக கறுப்பராயாகாவலாக இருக்க வேண்டும் காலமெல்லாம்.3. காலத்தால் அழியாத ஞானம் தந்தாய்காலன் அணுகாதபடி கருணை கூர்ந்தாய்தூலத்து பிணி துயரை அழித்திடுவாய்தூய மதியோடருளாய் வந்திடுவாய்பாலொத்த பக்தியோடு வாழ வைப்பாய்பாதுகாக்க கறுப்பராயா நீ இருப்பாய்சீலத்து வழியாலே பார்த்திருப்பாய்சிக்கலென்றால் அரிவாளை எடுத்திடுவாய்.4. எடுத்ததை ஓங்குமுன்னே இன்னல் போகும்.எடுப்பான மீசையது உயர்ந்து காணும்.மடிப்பான தலைப்பாகை வஸ்திரமும்மணிப்பிரம்பு சாட்டை பல ஆயுதமும்கடிவாளத்துடன் வெள்ளைக் குதிரை ஏறிகாற்றோடு கலந்தவராய் வாருமையாகறுப்பராயா அருள்வாக்காய் கூறுமையாகண்கலங்கும் பக்தர்களைக் காருமையா.5. காருமையா, கண்திருஷ்டி, சிரகபாதைகடுகோப சண்டாளத்தை போக்கிடையாஊரு சுற்றும் பேய் பில்லிய சூனியத்தைஉடனடியா தணுகாமல் போக்கிடையாமாறுபட்டு பொறாமை கொண்ட மனிதரெல்லாம்மதி திருந்தி வாழவே வேண்டுமையாபேருபெற்ற தெய்வமே உனைத் தொழுதோம்உறுதுணை உதவிகளைச் செய்திடையா.6. செய்திடுவாய் சிறப்பான செயல்கள் யாவும்செழிப்பான நல்வாழ்வாய் அமைத்திடையாமெஞ்ஞான சித்தியதால் மேலோனாகிமேதினியில் அமைதியினைத் தந்திடையா.அஞ்ஞானம் அற்றவனாய் ஆக்கிடையா,அருளான கறுப்பையா நீ இருய்யாபேய் பிரதே ஆவி தொல்லை போக்கிடையாபொல்லாதோர் வஞ்சகத்தை ஓட்டிடையா.7. ஓட்டிடுவாய் பக்தருக்குத் தொல்லை வந்தால்ஓங்கிய கை அரிவாளோடே நிற்பாய்பாட்டிதையே பாடி நாங்கள் பக்தி கொண்டோம்.பரவசத்தால் எங்களை நீ பார்த்திடையாநாட்டிலுள்ளோர் நகைக்கும்படி செய்திடாதேநம்பி விட்டோம் எங்களை நீ மறந்திடாதே.வாட்டத்தைப் போக்கிடையா கறுப்பராயா.வல்வினையால் அல்லல்களை கொடுத்திடாதே.8.கொடுத்திடாதே, கெடும்புத்தி கோபந்தன்னை நல்லகுணத்தோடு அனைவரையும் வாழ வைப்பாய்அடுத்தவர்கள் எமைக்கெடுக்க நினைத்தபோதுஅப்போது பக்கத்துணை நீ இருப்பாய்தடத்து வழி வரும்போதும் போகும் போதும்தடங்கலின்றி நன்மையே நடத்தி டுவாய்கடத்துகிறேன் காலத்தை கருப்பண்ணாஉன்காலடியில் கிடக்கின்றேன் கருணை வைப்பாய்.9. கருணையின் திருவுருவில் அமர்ந்து நின்றாய்கைகளிலே கதாயுதம் அரிவாள் கொண்டாய்.பொறுமையுற்றுச் சாட்டை பிரம்பை சுற்றிபொல்லாத பேய் பிசாசை போக்கிடுவாய்கருமையில் செய்து வைத்த செய்வினைகள்கறுப்பாராயா உனதருளால் அழித்திடுவாய்கலங்காத மன திடத்தை தந்திடுவாய்காலமெல்லாம் எங்களை நீ காத்தருள்வாய்.10. காக்கின்ற கன்னிமார் தெய்வங்களின்காவல் தெய்வமாகவே காட்சி தந்தாய்சேர்க்கின்ற மகாசக்தி ஏழுபேர்க்கும்சிறந்ததொரு காவலனாய் அமைந்திருப்பாய் -நீபார்க்கின்ற திசையெல்லாம் பாவம் போகும்பக்தி கொண்டால் பலரது சாபம் நீங்கும்போர்களத்து வீரனைப் போல் வழியில் தோன்றும்புனிதமாய் கறுப்பராயா வருவாய் என்றும்.11. என்றுமே கறுப்பண்ணா எனக்குள் இருப்பாய்ஏங்கும் மனத்துயர் போக்கி இன்பமாய்கன்று இழந்த பசுவதாய் ஆக்கிடாதேகாலமெல்லாம் காத்தருளத் தயங்கிடாதேவென்று வரும் வீரமதை குறைத்திடாதே.வீண் பொழுதாய் என் வாழ்வை போக்கிடாதேசென்று வரும் மூச்சதையே நிறுத்திடாதே - என்சீவனுக்கு துணை இருக்க மறந்திடாதே.12. மறக்கின்ற மனநிலையோ எனக்கிருக்கும் - என்மன்னவனே உனக்கது இருக்கலாமாதிறக்கின்றாய் அருட்கதவை தினமும் நீதான்தியானித்த பிறகு அதை மூடலாமாகுருநாதா நீ சொன்ன கொள்கையெல்லாம்குறைபாடு எனக்களித்து தள்ளலாமா!குலதெய்வம் கறுப்பண்ணசாமி நீதான்குற்றமது என் மேலே இருக்கலாமா.13. இருக்காமல் கோபத்தை தள்ளிடையாஇனி மன அமைதியினைத் தந்திடையாமறுக்காமல் மருத்துவத்தால் காத்திடையாமணிமந்திர தேவனே வந்திடையாதிருக்கோலக் காட்சியினைக் காட்டிடையாதீமைதரும் பகைவர்களை ஓட்டிடையாகறுப்பையா என்னுடனே சேருமையா - உன்கருணையருள் பார்வையதால் பாருமையா.14. பாருமையா என்றுமே பணிந்து சொன்னேன்பாவி என்ற பெயர்தனையே தந்திடாதேயாருடைய ஆதரவு எனக்கு இங்கேகறுப்பராயா கவலைகளைத் தந்திடாதேஊராரின் உண்மைகளை உணர்ந்திடவேஉத்தமனே உதவிடாது இருந்திடாதேகாரியத்தை காரணத்தை கடமைதன்னைகவனித்து செய்திடவே மறந்திடாதே.15, மறந்திடாதே என்றேனே மனமுருகிமாசற்ற மனிதனாய் வாழ வைப்பாய்உறவாகு அனைவருமே பிரிவார் ஓர்நாள்உற்றதுணை அப்போது இருக்க வேண்டும்தெரிந்தும் பல குற்றங்கள் செய்திருப்பேன்தேகமென ஆசை என்று நீ மன்னிப்பாய்புரியாமல் பேசியது பெரும் பிழையா - அந்தபேதை நெஞ்சை எந்தனுக்கு ஏன் கொடுத்தாய்16. கொடுத்தாயே பல திறமை என்னிடத்தில்குறையேது நிகழாமல் செய்ய வேண்டும்அடுத்து வரும் பொறுப்புக்கள் அத்தனையும்ஆனந்த அருளாக நிறைய வேண்டும்கொடுப்பதிலும், பெறுவதிலும் குணம்கெடாமல்குலதெய்வம் கறுப்பண்ணன் கருணைவேண்டும்நடுக்கடலில் பாய்மரம் தவிப்பதுபோல்நலமற்ற செயல்களையே தடுக்க வேண்டும்17. தடுத்திடுவாய் தவறுகள் எதுவானாலும்தனிக்கருணை கொண்டவனாய் வாருமையாசுடுகாடு இடுகாடு தன்னில் ஆடும்சுடலைக் கறுப்பண்ணனே பாருமையா!படும்துயரை தூரவே ஓட்டுமையாபக்தர்களின் குறைகளையே கேட்டிடையாகொடுவாளை எடுத்து வரும் தெய்வமையாகுணமுடனே அருள்புரிய வேண்டுமையா,18. அருள்புரிவாய் உதிரக் கறுப்பராயாஅப்பனே உனை நம்பி வாழுகின்றோம்ஒருவருக்கு தீங்கிழையா மனதைப் பெற்றுஉண்மையான இன்பமாய் இருக்க வேண்டும்தெருவுதனில் அலைகின்ற நாய்போல் என்றும்தேசத்தில் சுற்றிடவே செய்திடாதேபெருமையுடன் புகழோடும் பொருளும் சேர்ந்துபொய் மாயைப் போக்கிடவே கிருபை செய்வாய்.19. செய்வாயே சங்கலிக் கறுப்பராயா - உன்சீரடியை சேவித்து நிற்கின்றோமையாமெய்சிலிர்த்து விடுமுந்தன் மேனியதுமெதுவாகவே அசைந்து அசைந்து ஆடும்போதுகைகுவித்து வணங்குகின்றோம் பக்தியோடு உன்கட்டழகு திருமுகத்தைக் கண்டோமையாவையகத்து காவல் தெய்வம் நீதானையாவருகின்ற தீவினையை நீக்கிடையா!20. நீக்குகின்றாய் நிலையற்ற நினைவு தன்னைநிர்குணமாய் நெஞ்சத்தை ஆக்கினாயேஊக்கமதைக் கொடுத்தாயே உயர்ந்தோனாக்கஉணர்வு பொங்க உள்ளத்தில் உதிக்கின்றாயேபாக்களிலே வருகின்ற பல கருத்தை உன்பாதத் தாமரை தன்னில் பதித்திட்டேனேகாக்கின்றேன் என்று சொல்வாய் கறுப்பராயா.கடமைகளை நிறைவேற்ற அருள் செய்வாயா.21. செய்வாயா என்று சொன்ன சேதி கேட்டுசெவி சாய்க்க வேண்டுமையா கறுப்பராயாசெய்தொழில் மேன்மையதாய் ஆக்கிடையாசேவித்த பக்தருக்கும் சுகம் கொடையாபொய் மாயை சூழ்ந்திட்ட உலகம் தன்னில்பேரின்ப வாழ்வாக வழி காட்டையாமேய்யுருகி மனமுருகி கருப்பையா - என்றுமெழுகுபோல் உருகி தினம் முறையிட்டோமே.22. முறைகேட்டு குறைதீர்க்கவே வருவாயென்றுமுழுமனதோடு நாங்கள் யாசிக்கின்றோம்மறவாமல் இதைப் படித்து தியானிப்போர்க்குமதிமயக்கம் வந்திடாது மகிழ்ச்சி பொங்கும்மரியாதை கொடுத்திடுவார் மாந்தர் எல்லாம்மண்டியிட்டு எதிரிகளும் வணங்கி நிற்பார்வெறிகொண்ட பேய் பிசாசையாவும்விரட்டி ஓட வைப்பவனே கறுப்பராயன்.23. கறுப்பண்ண சாமியருள் அந்தாதி இருபத்து மூன்றைகருத்திலே நிறுத்தியே துதித்தவர்க்குவிருப்பம்போல் திருப்பத்தால் வாழ்வமையும்விவாக சுப மங்களங்கள் விரைவிலாகும்கருவில் உருவான தோஷம் மறைந்து போகும்கவலை, பிணி, நோய், திருஷ்டி கடுகியோடும்வருவாயும் அதிகரிக்கும் பொருளும் சேரும்வள்ளல் காவல் தெய்வமதை வணங்கிடுவோம்.