பத்ரகாளியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை
                              ADDED :3740 days ago 
                            
                          
                          மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடிக்குண்டம் விழா நடந்து வருகிறது. நேற்று, கோவில் வளாகத்தில், 108 திருவிளக்கு பூஜையும், அம்மனுக்கு சிறப்பு அபிசேக அலங்கார பூஜையும் செய்யப்பட்டன.திருவிளக்கு பூஜையை, சுப்ரமணிய சுவாமி கோவில் தனசேகர குருக்கள், அர்ச்சகர்கள் கண்ணன், பரமேஸ்வரன் நடத்தினர். விழாவில், ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். பரம்பரை அறங்காவலர் வசந்தா, உதவி ஆணையர் நந்தகுமார், கோவில் ஊழியர்கள் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.