தமிழகத்தில் கோவில்கள் அதிகம் இருப்பது ஏன்?
ADDED :3815 days ago
64 நாயன்மார்கள், 12 ஆழ்வார்கள் என அருளாளர்கள் பிறந்த புண்ணிய பூமி தமிழகம். திருத்தலங்களுக்கு நேரில் சென்று பதிகம், பாசுரங்களைப் பாடி மக்கள் மத்தியில் பக்திப்பயிர் வளர்த்தனர். தமிழ் இலக்கியத்தில் பக்தி பாடல்களே மிக அதிகம். கோவில் வழிபாடு என்பதுதமிழகத்தில் அன்றாட வாழ்வின் அம்சமாக இருப்பதால், கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற சுலவடை உள்ளது.