உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிரகப்பிரவேசம் நடத்தும் வீட்டு வாசலில் நிலைக்கண்ணாடி வைப்பது ஏன்?

கிரகப்பிரவேசம் நடத்தும் வீட்டு வாசலில் நிலைக்கண்ணாடி வைப்பது ஏன்?

மங்களப் பொருட்களில் ஒன்று கண்ணாடி. எனவே இதை வாசலில் வைக்கின்றனர். கோவிலில் நடக்கும் சோடஷ உபசாரத்தின் (16 வகை தீபாராதனை) போது மங்களகரமான கண்ணாடியை மூலவருக்குக் காட்டுவது வழக்கம். தன் முன் உள்ளதைப் பிரதிபலிக்கும் தன்மை கண்ணாடிக்கு உண்டு. இதனால், தீய எண்ணத்துடன் வீட்டுக்கு யாராவது வந்தால் ஏற்படும் திருஷ்டி தோஷம் அவருக்கே திரும்பி விடும் என்றும் சொல்வதுண்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !