திருவள்ளூர் வீரராகவருக்கு திருமஞ்சனம்!
ADDED :3839 days ago
திருவள்ளூர்: திருவள்ளூர் வீர ராகவர் கோவில் பவித்ர உற்சவத்தை முன்னிட்டு, உற்சவருக்கு திருமஞ்சன அலங்காரம் நடைபெற்றது.திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் நடைபெற்று வரும் பவித்ர உற்சவத்தின் நிறைவு நாள் நிகழ்ச்சி நடந்தது.
இதையடுத்து உற்சவர் வீரராகவருக்கு, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, திருமஞ்சனம் அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து, காலை 9:30 மணி முதல் 11:30 மணி வரை யாக பூஜைகள் நடந்தன. மாலையில் உற்சவர் நான்கு வீதிகளிலும் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.